ஒரு நாளில் கடவுச்சீட்டை பெற காத்திருப்பவர்களுக்கான விசேட அறிவித்தல்!
குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் நாளை 04 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி ஆகிய பிராந்திய அலுவலகங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, அதன் ஆரம்பகட்டமாக ஒவ்வொரு பிராந்திய அலுவலகத்திலும் முன்கூட்டியே நாளொன்றையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொண்ட விண்ணப்பதாரிகள் 100 பேருக்கு மாத்திரம் இந்த சேவை வழங்கப்படும்.
அத்துடன், www.immigration.gov.lk என்ற இணையதளத்திற்குப் பிரவேசித்து உரிய பிராந்திய அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்கு நாளொன்றையும் நேரத்தையும ஒதுக்கிக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்யாதவர்கள் சமூகமளிக்க வேண்டாம்
மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி ஆகிய பிராந்திய அலுவலகங்கள் மூலம் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்காக தற்போது விண்ணப்பதாரிகளுக்கு நாட்கள் மற்றும் நேரங்கள் வழங்கப்பட்டிருப்பதனால் அவர்களுக்கும் சேவைகளை வழங்க வேண்டியுள்ளது.
எனவே அந்த அலுவலகங்களில் விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்கு முன்கூட்டியே நாளையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ளாதவர்கள் சமூகமளிக்க வேண்டாம் எனவும் குடிவரவு - குடியகல்வு திணைக்கள அறிவித்துள்ளது.
