இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்! பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
கொலை சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்ய காவல்துறை பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
தெஹிவளை - கொஹுவலை, சரணங்கர வீதி, போதியவத்தை பகுதிக்கு டிசம்பர் 30 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கு வைக்கப்பட்டவர் சிறுமி அல்ல சிறுமியின் தாய் என தெரியவந்தது.
ஆரம்பக்கட்ட விசாரணை
இந்நிலையில், 16 வயது சிறுமி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில், சந்தேக நபரை கைது செய்ய காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், இவரே இந்த குற்றத்தை இழைத்த துப்பாக்கிதாரி என்பது தெரியவந்துள்ளது.
‘அருமதுர சமீர சில்வா’ எனப்படும் குறித்த நபர் தொடர்பான தகவல்களை, 071-8596408 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கல்கிஸ்ஸ காவல் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |