இந்தியாவால் இலங்கைக்கு ஏற்படப்போகும் நன்மை

Sri Lanka India Sagala Ratnayaka Israel-Hamas War
By Sathangani Apr 21, 2024 10:00 AM GMT
Report

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் கட்டுவதனூடாக நில ரீதியான நேரடி இணைப்பு ஏற்படுவதன் மூலம் இலங்கை எவ்வாறு நன்மையடைய முடியும் என்ற தொலைநோக்கு பார்வை எமக்கு இருக்க வேண்டும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க (Sagala Ratnayaka) தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சமகால பொருளாதார அபிவிருத்திகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

''இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். சுற்றுலாத்துறையை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மீள்புதுப்பிக்கதாக்க வலுசக்தி பயன்பாடுகள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

தாக்குதல் எதிரொலி : வடக்கில் தனியார் பேருந்து சேவை ஸ்தம்பிக்கும் அபாயம்...!

தாக்குதல் எதிரொலி : வடக்கில் தனியார் பேருந்து சேவை ஸ்தம்பிக்கும் அபாயம்...!

துறைமுகங்களை விருத்தி செய்தல்

மறுபுறம் ஆசியா மாத்திரமன்றி உலக பொருளாதாரத்தின் கேந்திர நிலையத்திற்கான வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும். இதற்கு நாட்டில் உள்ள அனைத்து துறைமுகங்களையும் நவீன தொழில்நுட்பத்துடன் அபிவிருத்தி செய்ய வேண்டும்.

இந்தியாவால் இலங்கைக்கு ஏற்படப்போகும் நன்மை | Sl Ports Will Benefit By Exports Of South Indian

கொழும்பு துறைமுகத்தின் தென் முனையத்தில் தான் கூடுதல் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. கிழக்கு மற்றும் மேற்கு முனையங்களிலும் முக்கிய துறைமுக செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

இவற்றை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வது அவசியம். அப்போதுதான் இந்தியாவுக்கு செல்லும் சர்வதேச சரக்கு கப்பல்களின் பண்ட பரிமாற்ற நடவடிக்கைகளை இலங்கையில் மேற்கொள்ள முடியும்.

சுதந்திரக் கட்சி அலுவலகத்திற்கு முன்னால் பதற்றம்: பதில் தலைவராக விஜேதாச ராஜபக்ச நியமனம்

சுதந்திரக் கட்சி அலுவலகத்திற்கு முன்னால் பதற்றம்: பதில் தலைவராக விஜேதாச ராஜபக்ச நியமனம்

சர்வதேச சரக்கு கப்பல்

இஸ்ரேல் - ஹமாஸ் மோதலுடன் சர்வதேச சரக்கு கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட மாற்றங்களினால் கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகள் அதிகரித்தன. இது இலங்கைக்கு நன்மையாகியது.

இந்தியாவால் இலங்கைக்கு ஏற்படப்போகும் நன்மை | Sl Ports Will Benefit By Exports Of South Indian

இந்தியாவுடனான இணைப்புகள் குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் கட்டுவதனூடாக நில ரீதியான நேரடி இணைப்பு ஏற்படுகிறது. இந்த இணைப்பின் ஊடாக இலங்கை எவ்வாறு நன்மை அடைய முடியும் என்ற தொலைநோக்கு பார்வை எமக்கு இருக்க வேண்டும்.

குறிப்பாக, தென்னிந்தியாவின் உற்பத்திகளின் ஏற்றுமதியில் இலங்கை துறைமுகங்கள் பயனடைய முடியும். குறிப்பாக கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களை தென்னிந்தியா தமது ஏற்றுமதிகளுக்காக பயன்படுத்த முடியும். இந்திய துறைமுகங்களை பயன்படுத்துவதை விட பொருளாதார ரீதியில் தென்னிந்தியாவுக்கு நன்மையளிக்கும்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

விவசாயம் உள்ளிட்ட உற்பத்திகள் 

இவ்வாறான திட்டங்களினால் இலங்கைக்கு தொழில் வாய்ப்பு ரீதியான நன்மைகள் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும். அதே போன்று உற்பத்தி பொருளாதாரத்திலும் இலங்கை கூடிய கவனம் செலுத்த வேண்டியதுள்ளது.

இந்தியாவால் இலங்கைக்கு ஏற்படப்போகும் நன்மை | Sl Ports Will Benefit By Exports Of South Indian

புதுப்பிக்கதக்க மின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி போன்ற துறைகளை கருத்தில் கொள்ள வேண்டியதுள்ளது. கனிய வளங்களை ஏற்றுமதி செய்யும் போது மூலப்பொருட்களாக அல்லாது முடிவுப்பொருட்களாக ஏற்றுமதி செய்ய வேண்டும். இதற்காக பல சர்வதேச நிறுவனங்களின் தொழிற்சாலைகளை உள்நாட்டில் நிர்மானிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாயம் உள்ளிட்ட அனைத்து உற்பத்திகளையும் தேசிய பொருளாதாரத்துடன் இணைக்கும் திட்டத்தினை முன்னெடுக்க வேண்டும். இதனை மையப்படுத்தியதாகவே எமது நிலையான பொருளாதார அபிவிருத்தி திட்டம் உள்ளது'' என தெரிவித்தார்.

மட்டக்களப்பில் தொடரும் சோதனைகள் : பாவனைக்கு பொருத்தமற்ற தானியங்கள் மீட்பு

மட்டக்களப்பில் தொடரும் சோதனைகள் : பாவனைக்கு பொருத்தமற்ற தானியங்கள் மீட்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.


ReeCha
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, மட்டக்களப்பு

10 Apr, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

08 Apr, 2022
மரண அறிவித்தல்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

06 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025