நாட்டை கட்டியெழுப்பும் அதிபரின் முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவு : உலக வங்கி
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா தெரிவித்துள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா ஆகியோருக்கு இடையில் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்று(19) இடம்பெற்ற, விசேட சந்திப்பொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் இலக்குகள்
இந்நிலையில், அதிபர் ஆரம்பித்துள்ள இந்த செயற்றிட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றால் இலங்கை எதிர்பார்க்கும் இலக்குகளை விரைவாக அடைய முடியுமென அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன்போது, கடந்த 2 வருடங்களில் இலங்கை எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உலக வங்கி வழங்கிய ஆதரவிற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க உலக வங்கியின் தலைவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.