எரிபொருள் வரிசைக்கு கிட்டியது தீர்வு - மலேசியாவில் இருந்து வருகிறது எரிபொருள் கப்பல்கள்
மலேசிய எரிபொருள் நிறுவனத்திடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கான பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று (03) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
1) CPC Cargo Schedule -
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 3, 2022
Confirmed Arrivals July -
Diesel - Coral 8-9, Vitol 11-14
Petrol - IOC 22-23
Crude Oil - Coral 15 July & 12 Aug
Furnace Oil - Coral 10/11
Awaiting Arrival Confirmation
Petrol - 10/11 July - Malaysia
Diesel - 15-17 July - IOC-upon advance payment
அதன்படி 50,000 மெற்றிக் தொன் பெற்றோல் மற்றும் 10,000 மெற்றிக் தொன் மண்ணெண்ணெய் என்பன எதிர்வரும் ஜுலை மாதம் 10 அல்லது 11 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளதாக அமைச்சர் கூறினார்.
தலா 40,000 மெற்றிக் தொன் டீசல் கொண்ட இரண்டு எரிபொருள் கப்பல்கள் ஜூலை 08 - 09 மற்றும் ஜூலை 11 - 14 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு வரும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.