ஒட்டுமொத்த குழுவுடனும் பதவி விலகிய ஷம்மி சில்வா! வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் இன்று (28) நடைபெற்ற விசேட குழுக் கூட்டத்தின் போது தமது பதவிகளை விட்டு விலக தீர்மானித்துள்ளனர்.
இதன் மூலம் ஷம்மி சில்வாவின் ஏழு ஆண்டு கால நிர்வாகம் முடிவுக்கு வந்துள்ளது.
அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஷம்மி சில்வா பதவி விலகக்கூடும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், தற்போது இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிய இடைக்கால தலைவர்
இந்த பதவி விலகலை தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு இடைக்காலத் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதன்முறையாகத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட ஷம்மி சில்வா, அதன்பின்னர் நடைபெற்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்றுத் தொடர்ந்து பதவியில் நீடித்தார்.
அவரது நிர்வாகத்தின் கீழ் அண்மைக் காலங்களில் சில கடுமையான சீர்திருத்தங்கள் மற்றும் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது ஒட்டுமொத்த செயற்குழுவும் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |