மைத்திரி தரப்பு எடுத்த அதிரடி முடிவு
வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு
நாளை (22) நடைபெறவுள்ள வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு எதிராக வாக்களிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.
கட்சி உறுப்புரிமை
அத்தோடு, முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட கட்சியில் இருந்து விலகிய அனைவரினதும் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தவும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
பொதுச் செயலாளர் பதவி
சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மஹிந்த அமரவீரவை நீக்கி அவருக்கு பதிலாக திலங்க சுமதிபாலவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த பதவிக்கு சுமதிபாலவின் பெயரை கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன முன்மொழிந்துள்ளதுடன், கட்சியின் மத்திய குழுவும் ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பான நியமனக் கடிதத்தை மைத்திரிபால சிறிசேன திலங்க சுமதிபாலவிடம் வழங்கியுள்ளார்.
திலங்க சுமதிபால சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.