உலக வங்கியின் நிதியை சூறையாடிய முன்னாள் அமைச்சர்கள் : அம்பலப்படுத்திய அநுர அரசு

Mahindananda Aluthgamage Lakshman Senewiratne Roshan Ranasinghe World Bank Samantha Vidyaratna
By Sathangani Nov 13, 2025 03:49 AM GMT
Report

பெருந்தோட்டத்துறை அபிவிருத்திக்காக கடந்த காலங்களில் உலக வங்கியால் வழங்கப்பட்ட நிதியை முன்னாள் அமைச்சர்களான தயா கமகே, ரொஷான் ரணசிங்க உட்பட அரசியல்வாதிகளின் உறவினர்கள் பகிர்ந்து கொண்டுள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன (Samantha Viddyarathna) தெரிவித்துள்ளார்.

நிதியை முறைகேடாக பயன்படுத்திய தரப்பினருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (12) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் பாதுகாப்புத் தரப்பு - கஜேந்திரகுமாரை எச்சரிக்கும் அநுர அரசு

வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் பாதுகாப்புத் தரப்பு - கஜேந்திரகுமாரை எச்சரிக்கும் அநுர அரசு

நிதியை மோசடி செய்தவர்கள் 

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, “ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கங்களில் அரச நிதி முறையாக பயன்படுத்தப்பட்டதா என்பது இன்றளவிலும் பிரச்சினைக்குரியதாக காணப்படுகிறது.

உலக வங்கியின் நிதியை சூறையாடிய முன்னாள் அமைச்சர்கள் : அம்பலப்படுத்திய அநுர அரசு | Slfp Former Ministers Embezzled World Bank Funds

கடந்த அரசாங்கங்களின் போது பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சுக்கு உலக வங்கி ஒதுக்கியிருந்த நிதி ஊடாக பெருந்தோட்ட தொழிற்றுறையை மேம்படுத்தவும், அந்த தொழிற்றுறையில் ஈடுபடுபவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

உலக வங்கியால் கிடைக்கப்பெற்ற நிதியில் 149.5 இலட்சம் ரூபாய் முன்னாள் அமைச்சர் தயா கமேகவின் மனைவிக்கும், 180 இலட்சம் ரூபாய் முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் மனைவிக்கும், 85 இலட்சம் ரூபாய் தயா கமகேவின் செயலாளருக்கும், 375 இலட்சம் ரூபாய் முன்னாள் அமைச்சர் லக்ஷமன் செனவிரத்னவின் மகனுக்கும், 481இலட்சம் ரூபாய் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் சகோதரருக்கு என்ற அடிப்படையில் நிதி வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு குறித்து அச்சம்..! பிற்போடப்பட்ட இலங்கை - பாகிஸ்தான் போட்டிகள்

பாதுகாப்பு குறித்து அச்சம்..! பிற்போடப்பட்ட இலங்கை - பாகிஸ்தான் போட்டிகள்

நிதியமைச்சு தீர்மானம் 

ஆனால் குறித்த அபிவிருத்தி செயற்திட்டம் முழுமைப்படுத்தப்படவில்லை. இந்த செயற்திட்டம் மற்றும் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பின் கள ஆய்வினை மேற்கொண்ட உலக வங்கி குறித்த நிதியை மீள ஒப்படைக்குமாறு குறிப்பிட்டது.

இந்த விடயம் தொடர்பில் உலக வங்கியிடம் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு நிதியை செலுத்துவதற்கு காலவகாசம் கோரியிருந்தோம். இருப்பினும் உலக வங்கி அதற்கு அனுமதி வழங்கவில்லை.

உலக வங்கியின் நிதியை சூறையாடிய முன்னாள் அமைச்சர்கள் : அம்பலப்படுத்திய அநுர அரசு | Slfp Former Ministers Embezzled World Bank Funds

வழங்கப்பட்ட நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே நிதியை மீள செலுத்துங்கள் அல்லது இலங்கைக்கான சகல நிதியுதவிகளும் நிறுத்தப்படும் என்று உலக வங்கி அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து 5 இலட்சத்து 8863 டொலரை செலுத்துவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. இவர்களின் ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிக்கும் நாங்கள் சர்வதேச மட்டத்தில் பொறுப்புக்கூற வேண்டியது.

பெருந்தோட்ட அமைச்சுக்கு உலக வங்கியால் கிடைத்த நிதியை முறைகேடாக பயன்படுத்தியவர்கள் இன்று பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கவுள்ள 200 ரூபா சம்பள அதிகரிப்பை கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.

உலக வங்கியால் கிடைக்கப்பெற்ற நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

குரல் பதிவு சர்ச்சையால் தடுமாறும் செல்வம் எம்பி: உண்மைகளை வெளிப்படுத்த முன்வருவாரா..!

குரல் பதிவு சர்ச்சையால் தடுமாறும் செல்வம் எம்பி: உண்மைகளை வெளிப்படுத்த முன்வருவாரா..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

 

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி