பிரான்சில் நடைமுறையாகும் புதிய சட்டம்: நாளை முதல் விதிக்கப்படவுள்ள தடை
மே மாதம் 31 திகதியான இன்று புகைபிடித்தலுக்கு எதிரான உலகதினம் கடைப்பிடிப்படும் நிலையில் நாளை(01) ஜுன் முதலாம் திகதி முதல் பிரான்சில் (France) பொது இடங்களின் சுற்றாடல் பகுதிகளில் புகைப் பிடிப்பது தடை செய்யப்படவுள்ளது.
இந்த விதியை மீறுவோருக்கு 135 யூரோ அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டம்
இதன்படி, சிறார்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் புகைப்பிடிக்கும் நடைமுறை நிறுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வருவதாக பிரான்சின் சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.
புகையிலை விற்பனையில் சரிவு
பிரான்சில் ஏற்கனவே பணியகங்கள் மற்றும் உணவுவிடுதிகளில் புகைபிடிப்பது தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது பூங்காக்கள் கடற்கரைகள் பாடசாலைகள் உட்பட்ட பொது இடங்களின் சுற்றாடற்பகுதிகளிலும் புகைப் பிடிப்பது தடை செய்யப்படுறது.
இந்த நிலையில் பிரான்சில் சிகரெட்டுகள் உட்பட புகையிலைப் பொருட்களின் விற்பனை தொடர்ந்தும் சரிந்து வருவதாகவும் கடந்த ஆண்டு புகையிலை விற்பனை அதற்கு முந்தைய ஆண்டை விட 11 சத வீதத்தால் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
