தந்தையின் தாக்குதலில் மகன் மரணம், தாய் படுகாயம்
Sri Lanka Police
Kegalle
Sri Lanka Police Investigation
By Jaso
தேவலேகம காவல் பிரிவின் படுவத்த பகுதியில் நேற்று (19) இரவு ஒருவர் தனது மனைவி மற்றும் மகனைத் தாக்கி மகனைக் கொன்றதாகவும், மனைவி காயமடைந்த நிலையில் கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் தேவலேகம காவல் நிலையம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
இறந்தவர் படுவத்த, ஹலமட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர்.
குடும்ப தகராறு காரணமாக கொலை
குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை தடியால் தாக்கி நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் தொடர்பாக நீதவான் விசாரணை நடத்தப்பட உள்ளது, மேலும் தேவலேகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |