இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடர் : இந்திய அணியில் இடம்பிடித்தார் வைபவ் சூர்யவன்ஷி
ஆப்கானிஸ்தான் அணியும் பங்கேற்கும், இலங்கையில் நடைபெறவிருக்கும் ஒருநாள் முத்தரப்புத் தொடருக்கான இந்தியா 'ஏ' அணியில் வைபவ் சூர்யவன்ஷி(Vaibhav Sooryavanshi) முதல் முறையாக இடம்பிடித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் துடுப்பாட்டவீரரான இவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணியில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராகவும் திகழ்ந்தார்.
சூர்யவன்ஷியின் அபாரமான வளர்ச்சி
இதைத் தொடர்ந்து, உயர்மட்ட கிரிக்கெட்டில் 15 வயதான சூர்யவன்ஷியின் அபாரமான வளர்ச்சி தொடர்கிறது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், 80 பந்துகளில் 175 ஓட்டங்கள் குவித்து, இந்தியா கோப்பையை வெல்ல வழிவகுத்தார்.
முத்தரப்பு தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா 'ஏ' அணி, இலங்கை 'ஏ' அணியை ஜூன் 9 அன்று எதிர்கொள்ளும்.
இறுதிப் போட்டி ஜூன் 21 அன்று நடைபெற உள்ளது. முத்தரப்புதொடருக்குப் பிறகு, இந்தியா 'ஏ' அணி, இலங்கை 'ஏ' அணிக்கு எதிராக இரண்டு சிவப்புப் பந்து போட்டிகளிலும் விளையாடும். முதல் தரப் போட்டிகளுக்கான அணி பின்னர் அறிவிக்கப்படும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |