ஹோர்முஸ் பாதுகாப்பு நடவடிக்கையில் அமெரிக்காவுடன் கைகோர்க்க போகும் தென் கொரியா
ஹோர்முஸ் வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது தொடர்பான அமெரிக்காவின் முன்மொழிவில் இணைவதற்குச் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக தென் கொரிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச கடல்வழிப் பாதைகளில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அனைத்து நாடுகளின் பொது நலனுக்கும் உகந்தது என்றும் தென் கொரிய தரப்பு கூறியுள்ளது.
இதற்கமைய சர்வதேச சட்டத்திற்கு இணங்கப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தென் கொரிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
புரொஜெக்ட் ஃப்ரீடம்
அமெரிக்க இராணுவம் கடந்த திங்கட்கிழமை 'புரொஜெக்ட் ஃப்ரீடம்' என்ற சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியது.

இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள முக்கிய கடல்வழிப் பாதைகளின் பாதுகாப்பு குறித்து தென் கொரியாவும் அமெரிக்காவும் தீவிரமாகக் கருத்துக்களைப் பரிமாறி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |