சபாநாயகரின் அலுவலகத்துக்குள்ளும் புகுந்தது கொரோனா
corona
parliament
speakeroffice
By Sumithiran
நாடாளுமன்ற ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்திலுள்ள சபாநாயகரின் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அலுவலகம் முடப்பட்டநிலையில் கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஏனைய ஊழியர்கள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு அனுப்பப்பட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ளனர்.
அத்துடன் தற்காலிகமாக சிறிது நாட்களுக்கு சபாநாயகர் அலுவலகம் வருவதையும் தவிர்த்துக் கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன மற்றும் பல எம்.பி.க்கள் முன்பு ஆயுர்வேத வைத்தியர் தம்மிக தயாரித்த கொரோனா பாணியை பருகியிருந்தனர்.
எனினும் சுகாதார அமைச்சினால் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் தம்மிகவின் பாணி தொற்றுநோய்க்கு எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்து.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 6 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி