சபாநாயகர் பதவி விலகல்! சமூக ஊடகத் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தனது பதவியில் இருந்து செய்யத் தயாராகி வருவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் அது குறித்த உண்மைத்தன்மைகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
எனினும் இது தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் சபாநாயகர் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை.
சபாநாயகருக்கு எதிராகப் பெறப்பட்ட முறைப்பாடுகள் குறித்து, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு ஒரு விசேட விசாரணையைத் தொடங்கியுள்ளதால், அவர் சபாநாயகராகத் தொடர்வது அறநெறிக்கு எதிரானது என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து வரும் தொடர்ச்சியான கடும் எதிர்ப்பு மற்றும் அழுத்தத்தின் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுக்க தீர்மானித்துள்ளதாக சமூக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஊழல் குற்றச்சாட்டுக
சபாநாயகரின் நிதி முறைகேடுகள் மற்றும் சிறப்புரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக, நாடாளுமன்ற முன்னாள் பிரதிச் செயலாளரும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடுகளை அளித்திருந்தார்.

அரசியலமைப்புப் பேரவையின் தலைவரும், சுயாதீனமாகச் செயல்பட வேண்டியவருமான சபாநாயகர், இத்தகைய கடுமையான விசாரணைக்கு உட்பட்டிருக்கும்போது பதவியில் நீடிப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் அறநெறிக்கும் எதிரானது என எதிர்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணைகளின் பின்னணியில் சபாநாயகர் தனது பதவியில் இருந்து செய்யத் தயாராகி வருகிறார் என்ற தகவல் பரவி வந்தபோதிலும், இது தொடர்பாக சபாநாயகரின் அதிகாரப்பூர்வ அலுவலகமோ அல்லது பொறுப்பான எந்தவொரு அரசாங்கத் துறையோ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |