காவல்துறையினருக்கு வழங்கப்படவுள்ள விசேட கொடுப்பனவு
அடுத்த வருடம் முதல் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் உணவு கொடுப்பனவை பாதுகாப்பு படையினரின் உணவு கொடுப்பனவிற்கு இணையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பொது பாதுகாப்பு அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவு திட்டம்

இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
“காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு வாழ்நாள் கொடுப்பனவு, உணவு கொடுப்பனவு போன்றவற்றை வழங்க முடியாது.
அமைச்சர் பாதுகாப்பு பிரிவின் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவு நாடாளுமன்ற பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு கிடைக்காமை தொடர்பில் ஆராயப்படும்.
அத்துடன், அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, உரிய விசேட கொடுப்பனவை பெறாத காவல்துறைக்குள் உள்ள மேலும் பல உள்ளகத் திணைக்களங்களுக்கும் இந்த விசேட கொடுப்பனவை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என்றார்.