பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் நலன் கருதி விசேட பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
புத்தாண்டு காலப்பகுதிக்காக சுமார் 1500 மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சேவைகள் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார்.
விசேட போக்குவரத்து சேவைகள்
தலைவர் மேலும் கூறுகையில், “கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன், பதுளை, கண்டி, பண்டாரவளை, அனுராதபுரம், திருகோணமலை, யாழ்ப்பாணம், சிலாபம் மற்றும் புத்தளம் ஆகிய இடங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

காலி மற்றும் மாத்தறை ஆகிய இடங்களை மையப்படுத்தி, அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக விசேட போக்குவரத்து சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதன்படி, இலங்கை தொடருந்து திணைக்களம் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் விசேட புத்தாண்டு சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.
குறிப்பாக, புறக்கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான வடக்கு வழித்தட தொடருந்து சேவைகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எதிர்வரும் 9ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |