புத்தாண்டில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!
புத்தாண்டு தினத்தில் பேருந்துகளில் பயணங்களை மேற்கொள்ள இருப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு தினத்தில் பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவை தெரிவித்துள்ளன.
பேருந்து சேவை
இதேவேளை, பயணிகளின் தேவைகளின் அடிப்படையில் கொழும்பில் இருந்து வெளி மாகாணங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கூறியுள்ளது.
குறிப்பாக 25 அல்லது 30 பேருந்துகளை மாத்திரம் இயங்குவதற்கு வாய்ப்பு வாய்ப்புள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரத்தியேக பிரிவொன்றின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.
மக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த தயாராக உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.
