உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக நாடு முழுவதும் விசேட பிரார்த்தனை

Easter Sri Lanka Easter Attack Sri Lanka
By Abi Apr 19, 2026 05:27 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விசேட பிரார்த்தனைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது.

பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் வேண்டுகோளுக்கிணங்க இந்த விசேட பிரார்த்தனைகள் இன்று (19.04.2026) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்றைய தினம் அனைத்துக் கத்தோலிக்கர்களும் தமது குடும்பங்களில் விசேட வழிபாடுகளை நடத்தி, உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்திக்காகவும், உண்மையும் நீதியும் விரைவில் வெளிப்படுத்தப்பட வேண்டியும் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்

நினைவேந்தல் நிகழ்வுகள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் இடம்பெற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) நாடு முழுவதிலுமுள்ள தேவாலயங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக நாடு முழுவதும் விசேட பிரார்த்தனை | Special Prayer For Those Who Died On Easter Sunday

அதற்கமைய காலை 8:45 மணிக்கு முதலாவது குண்டு வெடித்த நேரத்தைக் குறிக்கும் வகையில் அனைத்துத் தேவாலயங்களிலும் ஒருமுறை மணி ஒலிக்கப்பட்டு, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு காலை 8:47க்கு மெழுகுவர்த்திகள் அல்லது விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு காலை 8:50க்கு விசேட ஆராதனைகள் மற்றும் பிரார்த்தனைகள் இடம்பெறவுள்ளன. 

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மற்றும் உதவி ஆயர் அன்டன் ரஞ்சித் ஆகியோரின் தலைமையில் நினைவேந்தல் நடைபெறவுள்ளது.

இதில் வெளிநாட்டுத் தூதுவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி மற்றும் பௌத்த, இந்து, இஸ்லாமிய மதத் தலைவர்களின் விசேட உரைகளும் இடம்பெறவுள்ளன.

மிதிகமவில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு

மிதிகமவில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு

விசேட திருப்பலி

மேலும் கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் ஆயர் மெக்ஸ்வெல் சில்வா மற்றும் ஆயர் ஜே.டி. அந்தோனி தலைமையில் காலை 7:30 மணிக்கு விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு காலை 8:45 மணிக்கு உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் மெழுகுவர்த்திகள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக நாடு முழுவதும் விசேட பிரார்த்தனை | Special Prayer For Those Who Died On Easter Sunday

அன்றைய தினம் மாலை 4 மணிக்கு நீர்கொழும்பு மேரி ஸ்டெல்லா மைதானத்திலிருந்து நீதி மற்றும் உண்மை வேண்டி மாபெரும் பிரார்த்தனைப் பேரணி ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் பேரணி கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தை சென்றடைந்ததும், இலங்கையின் அனைத்து ஆயர்கள் இணைந்து விசேட ஆசீர்வாத வழிபாடுகளை முன்னெடுப்பார்கள் என கத்தோலிக்க திருச்சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவதானம் - நாட்டை அச்சுறுத்தும் விபத்து மரணங்கள் - தொடர்ந்து மீட்கப்படும சடலங்கள்

அவதானம் - நாட்டை அச்சுறுத்தும் விபத்து மரணங்கள் - தொடர்ந்து மீட்கப்படும சடலங்கள்

அதிகரிக்கும் பதற்றம் - மீறப்படும் போர் நிறுத்தம்...! தாக்குதலுக்கு தயாராகும் தரப்புக்கள்

அதிகரிக்கும் பதற்றம் - மீறப்படும் போர் நிறுத்தம்...! தாக்குதலுக்கு தயாராகும் தரப்புக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்