நாடாளுமன்றில் ரணில் விசேட உரை!!
ஜூன் 07ஆம் திகதி அன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
எதிர்வரும் ஜூன் 07 முதல் 10 ஆகிய திகதிகளில் நாடாளுமன்றம் கூடவுள்ளது இந்நிலையில், எதிர்வரும் 07ஆம் திகதி ரணில் விசேட உரையாற்றவுள்ளார்.
பொருளாதார நிலைமை குறித்து உரை
நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக அவர் இதன்போது உரையாற்றவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
மேலும் மறைந்த அமரகீர்த்தி தென்னகோனின் அனுதாபப் பிரேரணை வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நாடாளுமன்றம் கூடும் என்றும், நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மூன்று நாட்கள் விவாதம் நடத்தப்படும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.