கொழும்பின் சில பகுதி மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்
கொழும்பில் (Colombo) விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
கொழும்பு - புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயங்களின் 152 ஆவது ஆண்டு ஆடிவேல் தேர் திருவிழாவை முன்னிட்டு, இந்த விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
போக்குவரத்து நெரிசல்
அதற்கமைய, தேர்பவனி காரணமாக குறித்த பகுதிகளில் இன்று காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயம், காலி வீதி, காலி முகத்திடல், செத்தம் வீதி, யோர்க் வீதி, பிரதான வீதி, செட்டி வீதி, கதிரேசன் வீதி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும்.
இதனால் குறிப்பிட்ட வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதனால், வாகன சாரதிகளும் பொதுமக்களும் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |