மூடப்பட்டது ஆப்கானுக்கான இலங்கை தூதரகம்!
sri lanka
afganistan
closed
taliban
Embassy
By Kalaimathy
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இயங்கிய இலங்கை தூதரகத்தை மூட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் காணப்படும் நிச்சயமற்ற அரசியல் நிலைமை மற்றும் பாதுகாப்பு நிலைமையின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூதரகத்தின் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தாலிபான் அமைப்பு காபூல் நகரை கைப்பற்றிய பின்னர், ஆப்கானிஸ்தானுக்கான இலங்கையின் தூதுவர் தனிப்பட்ட விடுமுறையில் இலங்கை திரும்பியிருந்தார்.