இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இலங்கை - அவுஸ்திரேலியா இடையே விசேட நடவடிக்கை
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் முதலீட்டிற்கு ஒரு உகந்த இடமாக இலங்கை இருப்பதால், அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களை இலங்கைக்கு அழைப்பதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஆணையர் மத்தேயு டக்வொர்த்திடம் தெரிவித்துள்ளார்.
இந்தகலந்துரையாடல், சபாநாயகருக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஆணையருக்கும் இடையே இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோகனதீராவும் கலந்துகொண்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம்
மேலும் இந்தக் கலந்துந்துரையாடல் குறித்து தெரியவருகையில்,
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் அவுஸ்திரேலியா வழங்கிவரும் நீண்டகால ஆதரவிற்கு சபாநாயகர் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்குத் தொடர்ந்து உத்தரவாதம் அளிப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பல்வேறு துறைகளில் இலங்கையுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் அவுஸ்திரேலியா தனது உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.
விவசாயத் துறையில் இருதரப்பு வர்த்தகம்
இதற்கிடையில், பருப்பு வகைகள் உள்ளிட்ட அவுஸ்திரேலிய விவசாயப் பொருட்கள் இலங்கை சந்தையில் கிடைப்பதாகவும், குறிப்பாக விவசாயத் துறையில் இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அவுஸ்திரேலிய உயர் ஆணையர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் நட்புறவைப் பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்களது பரஸ்பர உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் இதன்போது மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 22 மணி நேரம் முன்