மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் நடந்த இறுதி யுத்தம் தொடர்பாக செய்தி வழங்கியவர் உயிரிழப்பு!
Mahinda Rajapaksa
Sri Lanka
Sri Lanka Final War
Australia
By Kalaimathy
அவுஸ்திரேலியா சிட்னிக்கான சிறிலங்காவின் துணைத் தூதுவராக கடமையாற்றி வந்த லக்ஷ்மன் ஹூலுகல்ல உயிரிழந்துள்ளார்.
66 வயதான அவர் அவுஸ்திரேலியாவில் இன்று காலை உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச அரச தலைவராக பதவி வகித்த காலத்தில், விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையிலான போர் தொடர்பான செய்திகளை ஊடகங்களுக்கு வழங்கி வந்த, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளராக லக்ஷ்மன் ஹூலுகல்ல கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.