மட்டக்களப்பில் கோர விபத்து- ஸ்தலத்தில் பலியான அரச உத்தியோகத்தர்!
ஓந்தாச்சிமடப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவிற்குபட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் ஓந்தாச்சிமடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் அரச உத்தியோகஸ்த்தர் ஒருவர் உயிரிழதுள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட எருவில் சமூர்த்தி வங்கியில் காசாளராக கடைமையாற்றும் களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான நாகராசா விஜேந்திரன் வயது 58 எனும் அரச உத்தியோகஸ்தரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு பக்கமிருந்து கல்முனை பக்கம் நோக்கி பணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பின்னால் சென்ற சொகுசு ரக ஜீப் வண்டி ஒன்று மோதியதிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக அவ்விடத்தில் நின்ற மக்கள தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னநெடுத்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.




