போராட்டத்தின் போது ஊடகவியலாளர்கள் மீது மிலேச்சத்தன தாக்குதல் - கண்டனப் போராட்டம்
உன்றியங்களின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் இன்று பகல் 12.00மணிக்கு இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
இதன் போது தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ஊடக அடக்கு முறையை உடனடியாக நிறுத்தக் கோரியும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் தாக்குதல் மேற்கொண்ட பாதுகாப்பு தரப்பினர் பதவி விலக வேண்டும் எனவும் கோரி குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிர்ப்பு
இலங்கையில் தொடர்ச்சியாக மக்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கிக் கொண்டு வரும் ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் தாக்கப்படுகின்ற சம்பவம் இந்த அரசாங்கத்தில் அதிகரித்து வருகின்ற நிலையில் இவ்வாறு ஒரு மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்ட நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



