சீனாவின் கழுகுப் பார்வைக்குள் சிக்கிய சிறிலங்கா!
இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் சீனா கூர்ந்து கவனித்து வருகிறது என சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வேங்க் வேன்பின் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டில் இடம்பெற்ற வழமையான செய்தியாளர் சந்திப்பொன்றில், இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இலங்கையின் சகல துறையினரும், நாடு மற்றும் நாட்டு மக்களின் அடிப்படை தேவைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஸ்திரத்தன்மையை அவதானிக்கும் சீனா

இலங்கைக்கு வழங்கிய பெரும் தொகை கடன்

சீனா இலங்கையில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களில் முதலீடுகளை செய்துள்ளதுடன் இலங்கைக்கு பெருந்தொகையான நிதியை கடனாக வழங்கியுள்ளது.
இதனால், இலங்கையில் ஏற்படும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் சீனா கூடிய கவனம் செலுத்தி வருகிறது.