போதைப்பொருள் பணத்திற்காக கடத்தப்பட்ட குழந்தை - இலங்கையில் பதற வைக்கும் சம்பவம்!
போதைப்பொருள் பெற்றுக்கொண்டமைக்காகன பணத்தை உரிய நேரத்தில் செலுத்தத் தவறியமைக்காக குழந்தை ஒன்று பணயமாக கடத்தப்பட்டுள்ளது.
நீர்கொழும்புப் பகுதியிலேயே போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பணத்தை செலுத்துமாறு வற்புறுத்தி குழந்தை கடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறை விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் உடனடி தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குழந்தை மீட்பு
இவ்வாறான தீவிர தேடுதலினையடுத்து, அதிரடிப்படையினர் குழந்தையைக் கண்டுபிடித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராண்ட்பாஸ் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ரண்திய உயன அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தே குழந்தை கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை மேலதிக விசாரணைகளுக்காக கிராண்ட்பாஸ் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பெண் கைது
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, ரண்திய உயன அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த பெண் ஒருவரே நீர்கொழும்பு பகுதியில் உள்ள நபரொருவருக்கு போதைப்பொருள் விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறான நிலையில், உரிய பணத்தை செலுத்தாததால் அவரது குழந்தை கடத்தப்பட்டது என விசாரணையில் தெரியவந்தது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
