கோட்டாபயவை திணற வைத்துள்ள கேள்விக் கணைகள் - இலங்கையின் எதிர்காலம் என்ன?
சிறிலங்கா அரச தலைவர் கோட்டபாய ராஜபக்ஷ நேற்று ஆற்றிய உரையினை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஹர்ஷ டி சில்வா காரசாரமான கேள்விக் கணைகளை தொடுத்துள்ளார்.
தற்போதைய நெருக்கடியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது தலைவரின் நல்ல நடவடிக்கையாக பாராட்டப்படுகிறது. அரச தலைவர் தனது உரையில், நெருக்கடி நிலையை ஏற்கனவே அடையாளம் கண்டுவிட்டதாக கூறினார்.
ஆனால் அதைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை என ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார். அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் பின்னர், ஹர்ஷ டி சில்வா தனது பேஸ்புக் கணக்கில் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில், “அதிமேதகு அரச தலைவர் அவர்களே, நாட்டு மக்களுக்கு நீங்கள் ஆற்றிய உரையை நான் கேட்டேன். சில பிரச்சினைகள் ஏற்பட்டதால் நான் இதை எழுதுகிறேன்.
இந்த நெருக்கடியை நீங்கள் முன்பே அடையாளம் கண்டதாக கூறினீர்கள். எனவே வாகன இறக்குமதியை நிறுத்தி அந்நிய செலாவணியை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளீர்கள்.
ஆனால், இப்படி ஒரு நெருக்கடியை நீங்கள் கண்டால், அரசியல் பிரபலத்தை பெறுவதற்காக வரிகளை குறைத்து சுமார் 600 பில்லியன் ரூபாய் வரி வருவாயை ஏன் இழந்தீர்கள்? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் மதிய நேர செய்திகளின் தொகுப்பு.