ஆபத்தான காலகட்டத்தை நோக்கி நகரும் இலங்கை! பொது மக்களுக்கு முக்கிய தகவல்
மேல் மாகாணத்தில் அதிக கொரோனாத்தொற்றாளர்கள் மீண்டும் ஒருமுறை இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் வடமேல், தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் சம்மேளன தலைவர் எம் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
தற்போது நாளாந்தம் 1900 என்ற அளவில் கொரோனா தொற்றாள்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் அடுத்த வாரம் இன்னும் நெருக்கடி மிக்க வாரம் ஒன்று எதிர்பார்க்கப்படுவதாக பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை பொறுத்தவரையில் ஆபத்தான காலத்தை நோக்கி நாடு சென்றுக்கொண்டிருக்கிறது. எனவே சுகாதார அதிகாரிகள் கொரொனாவின் மூன்றாவது அலையை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் காவல்துறையினரும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் நேற்று 187 இடங்களில் சோதனைகளை நடத்தினர். அவற்றில் 152 உடற்பயிற்சிகள் அகங்கள், தினப்பராமரிப்பு நிலையங்கள், பிரத்யேக வகுப்புக்கள் மற்றும் விருந்தகங்கள், உணவகங்கள் என்பன அடங்குகின்றன.