இலங்கையில் மீண்டும் கொரோனா - உயிரிழப்பும் அதிகரித்தது
COVID-19
Sri Lanka
Death
By Sumithiran
கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பு
கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகள் உயிரிழப்பது மீண்டும் அதிகரித்துள்ளதாகவும் நேற்றும் இன்றும் 5 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் உயிரிழந்தவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என திணைக்களத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பெண்களும் அடக்கம்
உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்கள் அடங்குகின்றனர். இதனிடையே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இன்றுவரை 119 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல்கள் திணைக்களம் கூறியுள்ளது.
இந்த நோயாளிகளுடன் இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 94 பேர் என பதிவாகியுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி