நாட்டு மக்களுக்கு கோட்டாபய வழங்கிய உறுதிமொழி!
Gotabaya Rajapaksa
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
Sri Lanka Fuel Crisis
By Kanna
எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிக்கு அடுத்த 10 நாட்களுக்குள் ஒரு தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் பத்து சுயேட்சை உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அரச தலைவர் இந்த விடயத்தை தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரச தலைவருடன் கலந்துரையாடியதாக லலித் எல்லாவல மேலும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் பிரச்சினைகளுக்கான தீர்வை அறிவிப்பதாக அரச தலைவர் உறுதியளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.