ஹிஜாப் யூனிபோர்மில் டபிள் கேம்!12 வருடங்களாக மாகாண தேர்தல் இல்லை…22 க்கு சர்வஜன தேர்தலாம்!
இத்தால் சகலரும் அறிவது யாதெனில்… சிறிலங்கா அரசியலமைப்பில் 22 ஆம் திருத்தத்தை ஒப்பேற்றத்தலைப்படும் அனுர அரசாங்கத்துக்கும் நாட்டின் உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ள பிரீதி பத்மன் சூரசேனவை இன்னும் 2 வருடங்களுக்கு பதவியில் இருத்தும் நோக்கத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அப்படி நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஐயோ என்கிறது அரசாங்கம்.
22 க்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தககூடத் தயார் என கொப்பராண சத்தியம் செய்யாத குறையாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அந்தோ பரிதாபம் அரசாங்கம் இலங்கையில் மாகாண சபை தேர்தல்கள் இடம்பெற்று 12 வருடங்கள் ஆகிவிட்டன. அதனை நடத்தும் சிஸ்ரம் சேஞ் அசுமாத்தியங்கள் ஏதும் இல்லை.
இப்போது முஸ்லிம் சுகாதார ஊழியர்களின் ஆடை விவகாரத்தில் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் விடயத்தை ஆட்சித்தரப்பு செய்வது போலத்தெரிகிறது.
தமிழ்பேசும் மக்கள் என்ற ஒரு ஒன்றுபட்ட அரசியல்தளத்தில் ஆளுங்கட்சியை எதிர்கொள்ள கடந்த மாதம் இரண்டு பிரதான முஸ்லிம் கட்சிகள் உட்பட தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகள் அரசியல் பேரவை என்ற ஒரு தளத்தை உருவாக்கியுள்ள நிலையில் தமிழர்களும் முஸ்லிம்களும் குடுமிப்பிடிகளை செய்யவேண்டும் என நினைக்கும் தரப்புகளுக்கு இப்போது இந்த விடயம் அவலாக மாறவேண்டும் என்பதால் இந்த நுட்பங்கள வருவதாக தெரியும் நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு,
நாமலுக்காக முந்திக்கொண்டு வந்த அர்ச்சுனா! பைத்தியம் என பதில் வழங்கிய மகிந்த ஜெயசிங்கவால் சபையில் வாக்குவாதம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4 Evening