இரத்தினக்கல் சுரங்கத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு!
SRILANKA
death
By Vasanth
அவிசாவலை - உள்ள வெரலுபிட்டி பகுதியில் இரத்தினக்கல் சுரங்கத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மழை காரணமாக நேற்றிரவு 7 மணியளவில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதை பார்வையிட குறித்த இடத்திற்குச் சென்றபோது அவர்கள் சுரங்கத்திற்குள் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
பலியான இருவரின் சடலங்களும் அவிசாவலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
தேசிய இரத்தின மற்றும் நகை ஆணையத்தின் அனுமதியுடன் சுரங்கம் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டாலும், விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.