பொய்த்து போகுமா ரணிலின் நம்பிக்கை..! அதிர்ச்சி கொடுத்த ஜப்பான்
இலங்கையின் கடன் வழங்கும் நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைக்கு இணைத் தலைமை வழங்க இலங்கையுடன் ஜப்பான் இன்னும் எவ்வித உடன்பாட்டையும் எட்டவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் அரசாங்கத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகமொன்று குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.
ரணிலின் நம்பிக்கை
எவ்வாறாயினும், கடன் மறுசீரமைப்புப் பணிகளில் மத்தியஸ்தராக ஜப்பான் முன்னணி வகிக்க உடன்பட்டிருப்பது நல்லதொரு அறிகுறி என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
இன்று நாடாளுமன்றில் ஆற்றிய விசேட உரையின் போதே ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.
இந்நிலையில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பை பேச்சுவார்த்தைக்கு இணைத் தலைமை வழங்க ஜப்பான் இன்னும் எவ்வித உடன்பாட்டையும் எட்டவில்லை என தற்பொழுது வெளியாகி உள்ள செய்திகள் அரசியல் மட்டத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
இதேவேளை, முன்னதாக கடன் மறுசீரமைப்பு விடயத்தின் இலங்கையின் கடன் கொடுநர்களை ஒன்றிணைக்கும் செயற்பாட்டினை முன்னெடுக்க தாம் தயாராக உள்ளதாகவும் ஜப்பான் அரசாங்கம் அறிவித்திருந்தது.
அத்துடன், அண்மையில் ஜப்பான் சென்றிருந்த ரணில் விக்ரமசிங்க, அந்நாட்டு அரசாங்கத்துடன், முன்னெடுத்த பேச்சுவார்த்தையின்போது, இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு விடயத்தில் ஜப்பான் இணக்கம் தெரிவித்ததாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.