இன்னும் 10 வருடங்களுக்கு தொடரப்போகும் இலங்கை நெருக்கடி
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு விவகாரம் அண்மைய நாட்களில் இலங்கையின் அரசியல் களத்தில் ஒரு பூதாகரமான பேசுபொருளாகவும் மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு விடயமாகவும் மாறியிருக்கிறது.
சிறிலங்கா அரசாங்கத்தின் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் வங்கிகளுக்கான மிகநீண்ட விடுமுறை இப்படியான சந்தேகத்தை அதிகப்படுத்தும் நடவடிக்கைளோடு கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான உயர்மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு என்றால் என்ன ? அது ஏன் மேற்கொள்ளப்படுகிறது ? இந்த விடயம் ஏன் இவ்வளவு பூதாகரமாக நோக்கப்படுகிறது ? இதைத்தாண்டி மக்களின் வங்கி வைப்புகள், ஊழியர் சேமலாபாய நிதி இவற்றின் நிலை என்ன ? இப்படியான பல கேள்விகள் இயல்பாகவே எழுந்திருக்கும்.
அந்த அடிப்படையில் இக் கேள்விகளுக்கான முழுமையான பதில்களோடும் அதைத்தாண்டி இவற்றிற்கு அப்பால் சிறிலங்காவின் சமகால பொருளாதார நிலைமை, அது எதிர்காலத்தில் எவ்வாறான தாக்கங்களை உண்டுபண்ணப்போகிறது, இவைபற்றிய முழுமையான விபரங்களை தருகிறார் ஐபிசி தமிழின் நெற்றிக்கண் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம்,