ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்- சக்தி வாய்ந்த நாடுகளை அணுகவுள்ள பேராயர்!
இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்பில் சக்தி வாய்ந்த நாடுகளை அணுகவுள்ளதாக கொழும்பு பேராயர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு நீதி கிடைக்க இலங்கையில், தங்களால் முடிந்தவரை முயற்சித்ததாவும் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துவிட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஈஸ்டர் தாக்குதல் வழக்கை சர்வதேச அளவில் எடுத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருவதாக கொழும்பு பேராயர், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
எனவே ஐக்கிய நாடுகள் சபைக்கு செல்வதே அர்த்தம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்வதற்காக இலங்கையுடன் தொடர்பு வைத்திருக்கும் சக்தி வாய்ந்த நாடுகளையும் தாம் அணுகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இவ்வளவு நாட்களாக உள்நாட்டில் நீதி கிடைக்கும் என நம்பியமை காரணமாக மேற்கூறிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
