பொருளாதார குற்றத்தைச் செய்த கும்பல் வெளியே..! தடுக்கப் போராடியவர்கள் சிறையில் - சஜித் சீற்றம்
நாட்டை பொருளாதார ரீதியாக வக்குரோத்தாக்க முன்நின்ற, பொருளாதார குற்றத்தைச் செய்த கும்பல் வெளியே நடமாடித்திரிய, பொருளாதாரக் கொலையைத் தடுக்கப் போராடியவர்களை சிறையிலடைக்கும் நிலையே இங்கு நடந்திருக்கிறது. இது ஒரு விசித்திரமான நிலை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தொடம்கஸ்லந்த தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் இன்று(12) கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“நாட்டைப் பொருளாதார ரீதியாக வக்குரோத்தாக்க முன்நின்ற சில பிரதான தலைவர்களில் முன்னிலையில் இருந்த ஒருவரான அஜித் நிவார்ட் கப்ரால், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தானும் தனது கும்பலும் செய்த பொருளாதாரக் குற்றங்களைப் பற்றி புத்தகங்கள் எழுதுகிறார்.
ஆனால், இந்த நாட்டை பொருளாதார ரீதியில் வங்குரோத்தடையச் செய்து பாரிய பொருளாதார குற்றங்களை இழைத்த கும்பலுக்கு எதிராக வீதியில் இறங்கிய சிறிதம்ம தேரர், முதலிகே உள்ளிட்டோரை சிறையில் அடைத்தமை என்னவொரு அநியாயமான செயல்.
பொருளாதார குற்றம்
பொருளாதார குற்றத்தைச் செய்த கும்பலே சிறையில் இருக்க வேண்டும், ஆனால் பொருளாதாரக் கொலையைத் தடுக்கப் போராடிய குழுவைச் சிறையிலடைக்கும் நிலையே நடந்திருக்கிறது.
நாட்டு மக்கள் தற்போது தேர்தலொன்றையே கோருகின்றனர். அதனைப் பெறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி போராடும்” என்றார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் மாலை திருவிழா
