பொருளாதார பேரழிவில் இலங்கை - அமெரிக்காவில் இருந்து எச்சரிக்கை தகவல்
இலங்கையின் பணவீக்கம் மூன்று மடங்காக உயர்வு
இலங்கையின் வருடாந்த அடிப்படையிலான பணவீக்கமானது 130.14 வீதம் வரை உயர்வடைந்துள்ளதாக அமெரிக்காவின் ஜோன் ஹொப்கிங்ஸ் பல்கலைகழகத்தின் பொருளியல் பேராசிரியர் ஸ்ரிவ் ஹாங்க் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளதுடன், கடந்த ஜனவரி முதலாம் திகதியில் இருந்து இலங்கை ரூபாவின் பெறுமதியும் 50 வீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் இலங்கையின் பணவீக்கமானது மூன்று மடங்கிற்கும் அதிகமாக உயர்வடைந்து. கடந்த மாதம் 39.10 வீதமாக பதிவாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடி மோசம்
இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது தொடர்ச்சியாக மோசமடைந்து செல்கின்றது எனபேராசிரியர் ஸ்ரிவ் ஹாங்க் எச்சரித்துள்ளார்.
நாடுகளின் நிதி நிலைமைகளின் அடிப்படையில் அந்தந்த நாடுகளின் பணவீக்கம் தொடர்பான நிலைமைகளை பேராசிரியர் ஸ்ரிவ் ஹாங்க் அறிக்கையிட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.