நாட்டில் உக்கிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடி- வெகுஜன எதிர்ப்புத் தொடர்பான புலனாய்வு அறிக்கை!
பொருளாதார நெருக்கடி உக்கிரமடைந்து வரும் நிலைமையில் திட்டமிடப்படாத வெகுஜன எதிர்ப்பு, நாடு முழுவதும் அதிகரித்து வருவது தொடர்பாக அரச புலனாய்வு சேவை அறிக்கை வழங்கியுள்ளது.
கோட்டாபய நாட்டு மக்களுக்கு உரையாற்றியமை மற்றும் சர்வதேச நாணய நிதியததின் உதவியை பெற்றுக்கொள்ள முடிவு செய்தமை ஆகியவற்றுக்கு இந்த பின்னணியே பிரதான காரணமாக அமைந்தது எனக் கூறப்படுகிறது.
முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் எதிர்ப்பானது அரசியல் கட்சியை மீறி செல்லும் வெகுஜன எதிர்ப்பாக மாறி வருவதாக புலனாய்வு பிரிவுகள் அறிக்கை வழங்கியுள்ளன.
பொது மக்களுக்கு தமது அத்தியவசிய தேவையான உணவை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பாதிப்பானது மோசமான சமூக நெருக்கடியாக மாறி வருகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாழ்க்கை செலவுகளுடன் பணவீக்கம் அதிகரிக்கும் போது மக்களுக்கு கொள்வனவு செய்யும் இயலுமை குறைந்து அவர்கள் மத்தியில் விரக்தியான நிலைமை உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
