வெவ்வேறு இடங்களில் யானை தாக்கி மூவர் பலி!
Sri Lanka Police
Elephant
Death
By pavan
இலங்கையில் வெவ்வேறு இடங்களில் காட்டு யானை தாக்கியதில் மூன்று விவசாயிகள் பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
பொலனறுவை - திம்புலாகல, மெதிரிகிரிய - நவநகர மற்றும் சாலியவெவ - நிலபம்மா ஆகிய பிரதேசங்களில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வெவ்வேறு பகுதிகளில் உயிரிழந்த மூவர்
பொலனறுவை - திம்புலாகல பிரதேசத்தில் 47 வயதான டி.எம்.செனவிரத்ன என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.
அதேவேளை மெதிரிகிரிய - நவநகர பிரதேசத்தில் டி.பி.டி.ஜி. சரத்சந்ர என்ற 65 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.
அதேபோன்று சாலியவெவ - நிலபம்மா பிரதேசத்தில் ஆர்.பீ.டீ.பிரேமதாச என்ற 76 வயதான வயோதிபர் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி பலியாகியுள்ளார்.
