சிங்கப்பூரிலிருந்து வெளியேறினார் கோட்டாபய!
Gotabaya Rajapaksa
Sri Lanka
Singapore
Thailand
By Kalaimathy
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரிலிருந்து தற்போது வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபய ராஜாக்ச இன்று சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டுள்ள நிலையில், தாய்லாந்துக்கு சென்று அங்கு 90 நாட்கள் தங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்காக வழங்கப்பட்ட விசா இன்றுடன் காலாவதியாகிய நிலையிலேயே சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டுள்ளார்.
இதேவேளை மனிதாபிமான அடிப்படையில் கோட்டாபய ராஜாக்சவிற்கு தாய்லாந்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படுள்ளதாகவும் தாய்லாந்து பிரதமர் நேற்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 1 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி