விசேட குழுவை நியமித்த கோட்டாபய- உடனடி அறிக்கைக்கு வலியுறுத்தல்!
gotabaya
gas
sri Lanka
exploded
By Kalaimathy
கோட்டாபய ராஜபக்சவினால் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மை காலமாக நாட்டில் ஏற்படும் சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காகவே 8 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் தலைவராக பேராசிரியர் சாந்த வல்பொலகே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து அதற்கான தீர்வுகளுடன் கூடிய அறிக்கையை விரைவில் கையளிக்குமாறு அந்த குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளதாக அரச தலைவர் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி