கூட்டுப் பொறுப்பை மதிக்காது நடந்து கொண்ட விமல் மற்றும் கம்மன்பில ஆகியோர் செய்த தவறுகள் மன்னிக்க முடியாதவை!

sri lanka government wimal weerawansa press meet udaya gammanpila mahinda pathirana
By Kalaimathy Mar 04, 2022 11:04 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய இரண்டு பேர் முக்கியமான அமைச்சு பதவிகளை பயன்படுத்தி நெருக்கடிகளை உருவாக்கியது, நாட்டின் அப்பாவி மக்களுக்கு எதிராக மேற்கொண்ட மிக மோசமான குற்றம் என  பொதுஜன பெரமுனவின் ஆலோசகரும் இலங்கை பத்திரிகை சபையின் தலைவருமான கலாநிதி மகிந்த பத்திரன தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அவரது பதிவில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

அவர்கள் செய்த சூழ்ச்சிகள் என்றுமே மன்னிக்க முடியாதவை எனவும் வீரவன்சவும் கம்மன்பிலவும் அமைச்சு பதவிகளை பயன்படுத்தி உருவாக்கிய நெருக்கடிகள் அரசியல் தவறுகள் அல்ல. அப்பாவி மக்களுக்கு செய்த மோசமான குற்றம்.

இந்த நெருக்கடிகள் காரணமாக எரிபொருளுக்காக வரிசைகளில் நிற்கும் பொதுமக்களின் அப்பாவி தனமான முகங்களை பார்க்கும் போது, எமக்கு ஏற்படும் குற்ற உணர்வு வெளிப்படுத்த முடியாதது.

இந்த நிலைமையை உருவாக்க விமல், கம்மன்பில ஆகியோர் செய்த சூழ்ச்சிகளுக்கு எப்போதும் மன்னிப்பு வழங்க முடியாது. தமது எதிர்கால அரசியல் அதிகார நிகழ்ச்சி நிரலுக்காக அவர்கள் இதனை செய்தனர்.

இவர்கள் இருவரும் பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் பயணத்திற்கு தடையேற்படுத்தினர். அவர்கள் தமது தவறை திருத்திக்கொள்வார்கள் என்று எண்ணி அரச தலைவர் பொறுமையாக இருந்தார்.

தொற்று நோய் அதற்கு பின்னர் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் ஒன்றாக செயற்பட வேண்டிய அமைச்சரவைக்குள் இருந்த இவர்கள், கூட்டுப் பொறுப்பை மதிக்காது நடந்து கொண்டனர். இவர்கள் அரச தலைவரின் பொறுமையை அடிக்கடி பரிசோதித்தனர்.

அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களை உருவாக்கினர். நாடு தற்போது அடைந்துள்ள நிலைமைக்கு வழியை ஏற்படுத்தி முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கும் அளவுக்கு இவர்கள் சென்றனர்.

வீரவன்ச மற்றும் கம்மன்பில ஆகியோருக்கு நாட்டின் மிக முக்கியமான அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டிருந்தன. கைத்தொழில் அமைச்சின் கீழ் பல நிறுவனங்கள் இருக்கின்றன. எரிசக்தி அமைச்சு இதே போன்று பலமான அமைச்சு.

எனினும் இவர்கள் இருவரும் தமது பொறுப்பை ஒதுக்கி வைத்து விட்டு, எதிர்க்கட்சியை போல் நடந்துக்கொண்டனர். அமைச்சரவையில் அங்கம் வகித்துக்கொண்டு அனைத்து சிறப்புரிமைகளையும் அனுபவித்துக்கொண்டு, அரசாங்கத்துடன் தொடர்பில்லாத உணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இருவரும் ஈடுபட்டனர்.

அரசாங்கத்தின் வெற்றியை பங்கு போட்டுக்கொண்ட இவர்கள், சவால்கள் ஏற்படும் போது அதனை ஒரு தரப்பினர் மீது சுமத்தினர். பொறுமைக்கும் எல்லை உண்டு. விமலும் கம்மன்பிலும் பொறுமையின் எல்லையை மீறினர்.

கத்தி தங்கத்தில் இருந்தாலும் அதில் குத்திக்கொள்வது மரணத்தை ஏற்படுத்தும் எனவும் மகிந்த பத்திரன குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016