கோட்டபாய வெளியேறிய பின்னரே எரிபொருள்! கட்டார் அரச தலைவர் இராஜதந்திர எதிர்ப்பு: வெளியாகிய காரணம்
ராஜபக்ச வெளியேறிய பின்னரே எரிபொருள்
அரச தலைவர் கோட்டபாய ராஜபக்ச பதவியில் இருந்து வெளியேறிய பின்னரே எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் வழங்குவதற்கான அடிப்படையை அமைக்கலாம் என்று கட்டார் அரச தலைவர் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எரிபொருளைத் தேடிச் சென்ற இலங்கைக் குழுவிடம், கட்டார் அரச தலைவர் சூசகமாக இதனைத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத அமைப்பாக கருதி தடை
இந்த விடயம் இராஜதந்திர எதிர்ப்பாக வெளிப்படுத்தப்படுகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கட்டார் தொண்டு நிறுவனத்தை பயங்கரவாத அமைப்பாக கருதி தடை செய்து, அந்த அமைப்பிடம் உதவி பெற்று கல்வி நிறுவனம் நடத்தி சென்ற ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில் நடந்து கொண்ட முறை ஆகியவைவே இந்த எதிர்ப்பிற்கு காரணம் என சுட்டிக்காட்டியுள்ளது.
கலந்துரையாடலுக்கு இடமளிக்காமல் தகனம் செய்தமை
உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளுக்கமைய, கொரோனா நோயால் உயிரிழந்த இஸ்லாமிய மக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு உலகின் 57 இஸ்லாமிய நாடுகளின் பங்களிப்புடன் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை விடுத்தது.
அந்த கோரிக்கையை பொருட்படுத்தாமல் நெகிழ்ச்சியான கலந்துரையாடலுக்கு இடமளிக்காமல் தகனம் செய்தமை இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பிற்கு இவையே காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.