இலங்கை - இந்திய புரிந்துணர்வு ஒப்பந்தம் : வெடித்த சர்ச்சை

Anura Kumara Dissanayaka Narendra Modi India
By Shalini Balachandran Apr 07, 2025 09:39 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in இந்தியா
Report

பாதுகாப்பு ஒத்துழைப்புக்காக இந்தியாவிற்கும் (India) இலங்கைக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (MDMK) பொதுச் செயலாளர் வைகோ (Vaiko) கண்டித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் (Narendra Modi) இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் (Anura Kumara Dissanayake) அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இரு நாடுகளின் பாதுகாப்புப் படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு உட்பட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு கிடைத்த இடம்

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு கிடைத்த இடம்

இனப்படுகொலை

இது தொடர்பில் வைகோ கருத்து தெரிவிக்கையில், “இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் அநுர  திஸாநாயக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.

இலங்கை - இந்திய புரிந்துணர்வு ஒப்பந்தம் : வெடித்த சர்ச்சை | Sri Lanka India Memorandum Of Understanding

இந்தியா - இலங்கை இடையே ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன அதில் முக்கியமானது, இந்தியா - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தமாகும்.

இதன் அடிப்படையில், இந்திய இராணுவம் மற்றும் இலங்கை இராணுவத்திற்குமிடையே கூட்டு நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு ஒத்துழைப்பும் உதவியும் வழங்கும்.

[SWCODVI ]

இராணுவ புரிந்துணர்வு 

இது இலங்கை அரசுடன் போடப்பட்டிருக்கும் முதல் இராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

எங்கள் தொப்புள் கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்கள் ஒரு லட்சத்து 37 ஆயிரம் பேரை கொன்று குவித்தது இலங்கை இராணுவம்தான்.

இலங்கை - இந்திய புரிந்துணர்வு ஒப்பந்தம் : வெடித்த சர்ச்சை | Sri Lanka India Memorandum Of Understanding

ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி சிங்கள இராணுவம் கொன்றது.

தங்கள் மண்ணின் விடுதலைக்காக பல்லாயிரக்கணக்கான வீரர்களை பலி கொடுத்து தாயகத்தை மீட்பதற்குப் போராடிய விடுதலை இயக்கத்தைக் கருவறுத்தது சிங்கள இராணுவம்.

ஜனாதிபதி ட்ரம்பிற்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது போராட்டம்

ஜனாதிபதி ட்ரம்பிற்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது போராட்டம்

இனப்படுகொலை

யுத்தக் களத்தில் போராடிய தமிழ் வாலிபர்கள் எட்டு பேரை நிர்வாணப்படுத்தி கைகளைக் கட்டி பின்னந்தலையில் சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்றதையும், புலிகளின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசை ப்ரியாவை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி சிதைத்து சின்னாபின்னமாக்கி சுட்டுக் கொன்றதையும் இங்கிலாந்தின் சேனல் -4 தொலைக்காட்சி வெளியிட்டு உலகின் மனசாட்சியை உலுக்கியது.

இந்தக் கொடூர காட்சிகளைக் கண்ட அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும், இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கண்ணீர் விட்டுக் கதறினர்.

இலங்கை - இந்திய புரிந்துணர்வு ஒப்பந்தம் : வெடித்த சர்ச்சை | Sri Lanka India Memorandum Of Understanding

இனப்படுகொலை நடத்திய சிங்கள இராணுவத்தை ஹேக் நகரில் உள்ள பன்னாட்டு நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரித்து தண்டிக்க வேண்டும் என்று தமிழ் இனம் போராடிக் கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், இலங்கை இராணுவத்தோடு பிரதமர் நரேந்திர மோடி இராணுவ ஒப்பந்தம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமின்றி தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் கொடும் துரோகமாகும்.

தமிழ் இனத்தை வஞ்சித்திருக்கும் பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய “சிறிலங்கா மித்ர விபூஷண” விருது வழங்கப்பட்டிருப்பதும் பொருத்தமானது என்றுதான் தமிழ் மக்கள் கருதுவார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

கொட்டித் தீர்க்க போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

கொட்டித் தீர்க்க போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025