சிறிலங்கா-இந்தியா வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பு!
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு ஹைதராபாத் இல்லத்தில் இன்று மாலை இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இச்சந்திப்பின் போது, இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஸ் வர்தன் சிறிங்லாவையும் (Harsh Vardhan Shringla) வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் சந்தித்து கலந்துரையாடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும், இரண்டு நாட்டு கடற்தொழிலாளர்களின் பிரச்சினைகள் என்பன குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
