நெருக்கடியை உருவாக்கிய நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் ரத்து!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அனைத்து விசாரணைகளும் நிறைவடையும் வரை Isolez Bio Tech Pharma நிறுவனத்திற்கான அனைத்து கொடுப்பனவுகளும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சின் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
இந்த மருந்து நிறுவனம் தொடர்பில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் அனுப்பப்பட்டு விசாரணைகள் கோரப்பட்டு சந்தேகத்திற்குரிய பொருட்களை அந்த நிறுவனம் வழங்கியுள்ளதாகவும் தொடர்ந்தும் அவ்வாறான பொருட்கள் கிடைக்கப்பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்ட ஆலோசனை
அத்துடன், இந்த பிரச்சினைக்குரிய மருந்து நிறுவனம் மற்றும் சம்பவம் தொடர்பில் சட்ட ஆலோசனை வழங்குமாறும் சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சட்டமா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        