பணிக்குச் சென்று கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!
ஆரியகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம், ஆரியகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில், பருத்தித்துறை - அல்வாய் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
ஆரியகுளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர், அல்வாய் தெற்கைச் சேர்ந்த இந்திரசிங்கம் நிருபன் வயது 32 என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் அரச நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் குறித்த இளைஞர் தனது பணி நிமிர்ந்தம் இன்று அதிகாலை சென்ற போதே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
இவ் விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.