ஊடகங்களில் வெளியான செய்தியையடுத்து ஒன்று கூடிய மக்கள் - ஏமாற்றத்தையடுத்து போராட்டம்!
யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் வழங்க கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டோக்கன் பெற்றவர்களுக்கு எரிபொருள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டமையால் இன்றைய தினம் அதிகாலை தொடக்கம் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
எரிபொருள் கோரி போராட்டம்
இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுக்கே எரிபொருள் வழங்கப்படும் என அறிவித்தமையால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்றபட்டது.
அதனை அடுத்து வரிசையில் காத்திருந்த பலரும் மாவட்ட செயலகம் முன் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் போது சம்பவ இடத்திற்கு சென்றிருந்த காவல்துறையினரிடம், ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பொது மக்களுக்கான பெட்ரோல் வழங்கப்படும் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
பத்திரிகைகளில் வெளியான செய்தி
அதனையடுத்தே நாம் எரிபொருள் பெற நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தோம் என கூறி பத்திரிகை செய்திகளை காவல்துறையினரிடம் காட்டியுள்ளனர்.
அதேவேளை போராட்டம் நடத்தினவர்களுடன் மேலதிக மாவட்ட செயலர் ம. பிரதீபன் பேச்சு நடாத்திய போது, அத்தியாவசிய சேவையாளர்களுக்கு தான் எரிபொருள் விநியோகிக்குமாறு எமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கமையவே தாம் எரிபொருள் நிரப்பு நிலையத்தினருக்கு அவ்வாறு அறிவுறுத்தினோம் என தெரிவித்தார்.


