யாழில் கொடூரக் கொலை - களத்தில் குற்றத் தடுப்பு காவல்துறை!
இராசாவின் தோட்டப் பகுதியில் மூதாட்டி ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம், சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள வீட்டில் தனிமையில் இருந்த மூதாட்டி ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு அடித்து படுகொலை செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த காணிக்கையம்மா ஜெயசீலி பூபதி வயது 72 என காவல்துறைியனரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூதாட்டி இன்று மதியம் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.
மூதாட்டியின் வீட்டில் பணிபுரிவதற்காக சென்ற நபரே அவரை அடித்துக்கொலை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதிரையில் இருந்து ஜெபித்துக் கொண்டிருந்த பொழுது மூதாட்டியின் பின் பக்கமாக வந்தே அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொள்ளைச் சம்பவத்திற்கு வந்தவர்களே இதனைச் செய்திருக்கலாம் என காவல்துறையினரால் சந்தேகம் வெளியிடப்படுகிறது.
சந்தேக நபரைத் தேடும் பணியுடன் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.